Fri. Apr 19th, 2024

மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை ” விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது . குறிப்பாக , பாஜக ஆளும் குஜராத்துக்கு ரூ .608 கோடியும் , அதைவிட பெரிய மாநிலமான தமிழகத்துக்கு ரூ .33 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது எவ்வகையிலும் நியாயமற்றது .

அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு , மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது . அதில் , கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது .

அசாம் , பீஹார் , டெல்லி , ஹரியானா , இமாச்சல் , கேரளா , மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களைவிட தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . அதேபோல , பயிற்சியாளர்களும் டெல்லிக்கு 121 பேர் , அசாமுக்கு 56 பேரை பணியில் அமர்த்திவிட்டு , தமிழகத்துக்கு 18 பேரை மட்டும் பணியில் அமர்த்தியுள்ளனர் .

தமிழக வீரர்கள் சர்வதேச அளவில் சாதிக்கின்றனர் . அவர்களை ஊக்குவிப்பதை விடுத்து , மாநிலத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது நியாயமா ? மத்திய அரசுக்கு அதிக வரி வசூலித்துத் தரவும் , சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடத்தவும் மட்டும் தமிழகம் வேண்டுமா ? நிதி ஒதுக்குவதில் ஓரவஞ்சனைதானா ? “

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *