Thu. Mar 28th, 2024

முரசொலி பத்திரிக்கை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளது. அதில் ” ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலில் தேவை நிதானம்தான் . நிதியைக்கூட அப்புறமாகத் தேடிக் கொள்ளலாம் . அவர் முதலில் நிதானத்துக்கு வந்தால்தான் ஒன்றிய பா.ஜ.க அரசின் நிதி நிலைமை தெரியுமே தவிர . தவிர , நிதானம் இல்லாமல் ஆத்திரம் அடைந்தவராகக் காணப்பட்டால் உண்மை நிலையை உணர முடியாது .

எதிர்க்கட்சிகள் . குறிப்பாக : தி.மு.க. உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக பேசாமல் இருக்க முடியுமா ?

‘ வலுவான நிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்ளது ” என்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் . அதற்கு என்ன காரணம் சொல்கிறார் என்றால் , ஜி.எஸ்.டி. வரி வசூல் சிறப்பாக இருக்கிறது என்கிறார் . மக்கள் ஒழுங்காக வரி கட்டுகிறார்கள் என்றால் , மக்கள் உங்களைச் சகித்துக் கொள்கிறார்கள் என்று தான் அர்த்தமேதவிர – இந்தியப் பொருளாதாரம் சீராக இருக்கிறது என்று அர்த்தம் அல்ல .

‘ நீட் ‘ தேர்வை அதிகம் பேர் எழுதுகிறார்கள் என்பதற்காக அனைவரும் நீட் தேர்வை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமா என்ன ?

இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை என்பது வேறு : மக்கள் வரி கட்டுகிறார்கள் என்பது வேறு . தமிழ்நாட்டில் அதிகம் ஜி.எஸ்.டி. தொகை வசூலித்து விட்டார்களாம் . இதன்மூலமாக என்ன சொல்ல வருகிறார்கள் ? தமிழ்நாட்டின் தொழிலதிபர்கள் அனைவரும் ஜி.எஸ்.டி தொகையை ஏற்றுக் கொண்டார்கள் என்று பொருளா ?

சில நாட்களுக்கு முன்னால் தமிழகத்தில் உள்ள அரிசி ஆலை அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் . அரிசி . கோதுமை . பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களின் மீதான 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அறிவிப்புக்கு எதிராகத்தான் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள் . ” ஒன்றிய அரசு சாமானிய மக்களைப் பாதிக்கும் விதத்தில் உணவுப் பொருள்கள் மீது ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தி இருக்கிறது . இதனால் அரிசி விலை 3 முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்கும் . இதனால் பொதுமக்களும் பாதிப்படைவார்கள் . விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் ” என்று அரிசி ஆலை அதிபர்கள் சொன்னார்கள் .

இது தமிழ்நாட்டில் மட்டும் நடந்த ஸ்டிரைக் அல்ல : ஆந்திரா . கேரளா . கர்நாடகா , உத்தரப்பிரதேசம் . உத்தரகாண்ட ஆகிய மாநிலங்களிலும் நடந்திருக்கிறது . வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டார்கள் . தமிழ்நாடு . கேரளாவில் மட்டுமல்ல : பா.ஜ.க. ஆளும் கர்நாடகா . உ.பி.போன்ற மாநிலங்களிலும் நடந்துள்ளது . ” பேக் ” செய்யப்பட்ட தயிர் , கோதுமை மாவு , பிற தானியங்கள் , தேன் . பப்பாளி , உணவு தானியங்கள் போன்ற அனைத்து உணவுப் பொருள்களின் மீதும் வரியை உயர்த்திவிட்டார் நிர்மலா சீதாராமன் . ‘ ஏன் ஆத்திரப்படுகிறீர்கள் ? ” என்று கனிமொழி கருணாநிதியைப் பார்த்துக் கேட்கும் நிர்மலாதான் . நிதானம் இல்லாமல் இப்படி வரிகளை உயர்த்தினார் .

நாடு முழுவதும் அரிசி . கோதுமை ஆகியவற்றின் விலை அதிகரித்து வருகிறது . ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் அரிசி விலை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது . ( தமிழ்நாடு அதிகளவில் அரிசி உற்பத்தி செய்யும் மாநிலம் என்பதால் இங்கு அதிகரிக்கவில்லை . இங்கே சீரான ரேசன் முறையும் . இலவச அரிசியும் கிடைக்கிறது . பாசனப் பரப்பு அதிகமாகி உள்ளது . உற்பத்தி அதிகமாகி உள்ளது . அதனால் விலை உயரவில்லை . ) அரிசியை அதிகளவு பிற மாநிலங்களில் இருந்து விலை கொடுத்து வாங்கும் மாநிலங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன .

இதனை நிர்மலா சீதாராமன் நிதானமாக அறிய வேண்டும் .

இதைக் கேட்டால் , இறுதிச் சடங்கு நடத்துவதற்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு என்கிறார் நிர்மலா சீதாராமன் . அவரை நிதி அமைச்சராக ஏன் நியமித்தார்கள் என்பதற்கான விடை , இந்தப் பதில் மூலமாகத் தான் கிடைக்கிறது . தான் சொல்வதைக் கூச்சமில்லாமல் செய்வதற்கு ஒருவர் வேண்டும் என்று நினைத்துத்தான் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார் .

‘ இந்தியாவில் இறுதிச் சடங்கு , உடல் அடக்கம் , உடல் தகனம் போன்ற சவக்கிடங்குச் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படவில்லை . முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ” என்று நாடாளுமன்றத்தில் அவர் சொல்லி இருக்கிறார் . பழைய சுடுகாட்டுக்கு வரி இல்லையாம் . செத்துப் போனவர்கள் ‘ புண்ணியம் ’ செய்தவர்கள் . புதிய சுடுகாட்டுக்கு வரி உண்டு . வாழ்பவர்கள் ‘ பாவம் ‘ செய்தவர்கள் ! அவர்கள் அகராதியில் இதுதானே சரியானது ?

‘ உங்கள் தமிழ்நாட்டில் ‘ என்று சொல்லும் அளவுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதானம் தவறி இருக்கிறார் . ” எங்கள் தமிழ்நாட்டைப் பார்த்தால் உங்களுக்கு எதற்காக எரிகிறது ? ‘ தமிழ் பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல ‘ என்பது இதன் மூலம் புரிகிறதா ? தமிழ்நாட்டில் என்ன நடந்துள்ளது இந்த ஓராண்டு காலத்தில் என்பதே பாவம் அந்த நிதி அமைச்சருக்குத் தெரியவில்லை . ” பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்திக் 0 கொண்டே போகிறீர்கள் ” என்றால் , ” தமிழ்நாட்டில் ஏன் குறைக்கவில்லை என்கிறார் அவர் . தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தோமே , இது தெரியாதா அவருக்கு ?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் ஒன்றிய அரசு வரிக் குறைப்பு செய்தது . அதற்கு நான்கு மாதம் முன்பே ஆகஸ்ட் மாதம் 3 ரூபாயைக் குறைத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் . ஒன்றிய அரசின் வரிக் குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியும் 1 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன் . இதன்படி பார்த்தால் தி.மு.க. ஆட்சியில் லிட்டருக்கு 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது . தேர்தல் அறிக்கையில் நாம் சொன்னது ” 5 ரூபாய் குறைப்போம் ” என்பதுதான் . அதனைச் செயல்படுத்தியாகி விட்டது .

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் எளிமையாகச் சொன்னார் : ‘ பெட்ரோல் விலையை யார் குறைக்க வேண்டும் ? யார் ஏற்றினார்களோ அவர்கள்தான் குறைக்க வேண்டும் ‘ என்றார் . நிர்மலா சீதாராமன் தான் குறைக்க வேண்டும் . உங்களை நோக்கி வரும் கேள்விக்கு , நேரடியாகப் பதில் சொல்லிப் பழகுங்கள் . பதிலை , அடுத்தவர் மீதான பழியாக மாற்றாதீர்கள் . இதுதான் நிதான இழப்பின் முதல் கட்டம் ஆகும் .

நாடாளுமன்றம் என்பது விவாதக் களம் . கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள் . பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் . யாருமே கேள்வி கேட்கக் கூடாது என்று நினைக்க இது கோரஸ் கூடம் அல்ல . “

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *