தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கடந்த 35 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான நீர்நிலையை ஆக்கிரமித்து வந்த நிலையில் நிலத்தை காலி செய்யும்படி வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் அரசின் நிலத்திற்கு பதிலாக மாற்று இடம் தருவதாக அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் 35 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான நீர்நிலையை அக்கிரமித்துள்ளதால் மாற்று இடத்தை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Visits: 6