Thu. Apr 18th, 2024

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் அறிக்கை ” தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படவில்லை. இச்சூழலில், 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கடந்த அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியின் மோசமான நிதி நிர்வாகம், ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது, நீடிக்கும் எரிபொருள் விலை உயர்வு, பொதுவான பொருளாதார வீழ்ச்சி போன்ற பல்வேறு நெருக்கடிகளில் போக்குவரத்து துறை சிக்கியுள்ளது.

எனவே,14வது ஊதிய நிர்ணய பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடிக்க வேண்டும்.போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு,தீர்வு காண தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. “

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *