Fri. Mar 29th, 2024

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் கண்டன அறிக்கை ” நெய்வேலி NLC நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டின் வளத்தை எடுத்து தொழில் நடத்தும் பொதுத்துறை நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் புறக்கணிப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

உடனடியாக புதிய பொறியாளர் தேர்வு பட்டியலை ரத்துசெய்துவிட்டு NLCக்கு இடம் கொடுத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கவேண்டும்.

NLC நிறுவனம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கி போராடும். “

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *