Thu. Mar 28th, 2024

பாஜக ஆளும் குஜராத் மது விலக்கு மாநிலம் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்த 28 பேர் பலியாகினர்.

குஜராத் மாநிலத்தில் மது தடை செய்யப்பட்ட நிலையில் கள்ளச்சந்தையில் இருந்து சட்டவிரோதமாக மது டோர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. போடாட் மாவட்டத்தில் ரோஜித் பகுதியில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த 40க்கும் மேற்பட்டோர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனைகளில் அட்மிட் ஆகியுள்ளனர். இந்நிலையில் 28 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க குஜராத் பாஜக அரசு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். காங்கிரஸ் எம்எல்ஏ அமித் சாவ்தா கூறுகையில் ” பாஜக தலைவர்கள் மற்றும் காவல்துறையினர் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்” என கூறியுள்ளார்.

ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பாஜக மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *