சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் அராஃபா உரை இனி தமிழில் வாசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக்காவின் தலைவர் அப்துல் ரகுமான் அல் சுதைஸ் கூறும் போது “மதினா மெக்காவின் வளர்ச்சிக்கும், சேவைக்கும் சவுதி அரசு அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது. மொழிபெயர்ப்பு திட்டம் 14 மொழிகளே உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பெர்சியன், சீன மொழி, துருக்கிய மொழி, ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதில் தமிழ், வங்காளம் போன்ற மொழிகளும் இணைந்துள்ளன.”
Visits: 7