சென்னை மாநிலக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் தனது கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது “1972 ஆம் ஆண்டு ஜூன் 15ம் நாள் அரசியல் அறிவியல் பாட மாணவனாக சேர்ந்தபோதே நேரடி அரசியலில் இறங்கியிருந்தேன். இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவித்தபோது அதனை எதிர்த்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட மிசா கலகத்தினருடன் நானும் சிறையில் அடைக்கப்பட்டேன். மிசா சட்டத்தில் ஓராண்டு சிறைக்கைதியாக இருந்தபோது போலீஸ் பாதுகாப்போடு மாநிலக்கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதிவிட்டு சென்றதை இப்போது நினைத்து பார்க்கிறேன்.”
Visits: 7