Thu. Mar 28th, 2024

உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், நியாய விலைக் கடைகளில் சிறப்பாக பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் பரிசுகளை வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டம் சீராக செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் பணியாளர்களை ஊக்குவிப்பதற்கு இந்த திட்டம் பெரிதும் உதவும்.

மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு ஏற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் கழக அரசு ஈடுபட்டு வருகிறது.”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *