இலங்கை சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய மகளிர் அணி இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி சீரான இடைவெளிகளில் தனது விக்கெட்டுகளை இழந்து 50 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அம காஞ்சனா 47 (83) ரன்களும், நிலாக்ஷி டி சில்வா 32 (62) ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றஇலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 25.4 ஓவரில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 174 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 94 (83), ஷஃபாலி வர்மா 71 (71) ரன்களும் எடுத்தனர்.
Visits: 2