சண்டிகரில் நடைபெற்ற ஜி.எஸ்.டி வரி கவுன்சில் கூட்டத்தில் கிரைண்டருக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். இந்த வரி உயர்வு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்றுவரும் பல்வேறு தொழில்களில் முக்கியமானது வெட்கிரைண்டர் உற்பத்தி. கோவையின் அடையாளமாக உள்ள இந்த வெட்கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழிலை நம்பி பல சிறு,குறு தொழிற்சாலைகள் உள்ளன.
பணமதிப்பிழப்பு, கரோனாவின் தாக்கம், மூலப்பொருட்கள் விலை உயர்வு என அடுத்தடுத்த சிக்கல்களை சந்தித்து வரும் வெட்கிரைண்டர் உற்பத்தி தொழில் ஏற்கெனவே பாதிப்பில் உள்ளது. இந்நிலையில் வரியை உயர்த்தியது மேலும் பாதிக்கும்.
இதனால், கிரைண்டர்கள் விலை மேலும் உயர்ந்து, விற்பனை சரிவு ஏற்பட்டு, தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் தொழிற்சாலைகளும், அதனை நம்பி உள்ள தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.
Visits: 6