Fri. Mar 29th, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை ” ” அக்னிபத் ” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் ” .

இராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பா.ஜ. க. அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ” அக்னிபத் ” திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் . நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் .

மாதமிருமுறை வெளிவரும் பிரபல ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் , முன்னாள் மேஜர் ஜெனரல் ஜி.டி பக்ஸி , ” இத்திட்டத்தைக் கேள்விப்பட்டுத் திடுக்கிட்டுப் போனேன் . For God’s sake please don’t do it ” என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் .

இன்னொரு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் கத்யன் , ” 4 ஆண்டு ஒப்பந்தப் பணியில் சேரும் இராணுவ வீரர் , தன் உயிரைத் தியாகம் செய்யும் அளவிற்குப் போரில் பணியாற்றுவார் என எதிர்பார்க்க முடியாது ” என்று கவலை தெரிவித்துள்ளார் .

அரசியல் கட்சிகள் தவிர , நாட்டின் பாதுகாப்புப் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய பல முன்னாள் இராணுவ அதிகாரிகளும் , ” இராணுவப் பணி பகுதிநேரப் பணி ” அல்ல என்றும் , ” இதுபோன்ற தேர்வு , இராணுவத்தில் கட்டுப்பாட்டைக் கெடுக்கும் ” என்று கூறி , இந்தத் தேர்வுத் திட்டம் ஆபத்தானது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

இந்திய நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு , இலட்சக்கணக்கான இளைஞர்களின் இராணுவப் பணி எனும் இலட்சியத்தைச் சிதைக்கும் இந்த “ அக்னிபத் ” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .”

Visits: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *