சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக ஆளுநரின் சனாதனம் பற்றிய உரை மொத்தமும் அபத்தம். அரசமைப்புச் சட்டத்தை அமலாக்குவதும், நவீன இந்தியாவை கட்டமைப்பதும்தான் அரசின் நோக்கமாக இருக்க முடியும்.
சனாதனம் என்ற பெயரில் பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டை நியாயப்படுத்துவது, வரலாற்றை திரித்து வன்முறை உருவாக்குவதுமான போக்கில் விஷக் கருத்துக்களை விதைப்பது, பாஜகவின் அரசியல் திட்டமே அன்றி, அரசமைப்புச் சட்ட விழுமியம் அல்ல.
ஒன்றிய அரசின் முகவராகவே செயல்படும் ஆளுநர் தனது அரசியல் பேச்சுக்கு அனைத்து மேடைகளை பயன்படுத்தியும் வருகிறார். இது வன்மையான கண்டனத்துக்குரியது.”
Visits: 4