Fri. Mar 29th, 2024

ஒன்றிய அரசு நேற்று பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஒன்றிய அரசு. 2014 முதல் பெட்ரோல் மீது 250% (ரூ.23) வரியும், டீசல் மீது 900% (ரூ.29) வரியும் ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. உயர்த்திய வரியில் இருந்து 50% மட்டுமே குறைத்து விட்டு மாநிலங்களை குறைக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம் ” என தெரிவித்துள்ளார்.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *