Fri. Mar 29th, 2024

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பானது “புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தல், மாற்றங்கள் செய்தல் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் எளிதாக அணுகும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும்.

அதன்படி, மே மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (மே-14) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகள் தொடர்பான சேவைகளை பெறுவதோடு, பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்களையும் இம்முகாமில் தெரிவிக்கலாம். அந்த குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்குக்கான சேவைகளை தரமாகவும், துரிதமாகவும் வழங்க கழக அரசு உறுதி கொண்டுள்ளது. “

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *