Fri. Mar 29th, 2024

15 வது ஐபிஎல் சீசன் 49 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் புனேவில் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர்:
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கோஹ்லியும், கேப்டன் டு ப்ளசிஸ் இணைந்து அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். கோஹ்லி 30 (33) ரன்களிலும், டு ப்ளசிஸ் 38 (22) ரன்களிலும் அவுட் ஆகினர். அவரை பின் வந்த லோமனோர் 42 (27) அதிரடியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீக்சனா 3 விக்கெட்டும், மொயின் அலி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் கான்வெய் 56 (37) ரன்களும், மொயின் அலி 34 (27) ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் சென்னை ஆனால் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. பெங்களுர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டும், கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *