Thu. Mar 28th, 2024

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி “ஈகைத்திருநாளான ரமலானைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

இஸ்லாமிய சகோதர , சகோதரிகள் புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து பசித்திருப்பவனின் வலியை உணர்ந்து கொள்கிறார்கள் . மேலும் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோருக்குக் கொடுக்கிறார்கள் . இதன் வழியாக ஈகையினால் கிடைக்கிற இன்பத்தை பெருகிறார்கள் . உறவுகளிடம் , நண்பர்களிடம் பகை மறந்து அன்பு செலுத்துகிறார்கள் . இந்த சிறப்புகளோடு இறைவனை வணங்கி ரமலானைக் கொண்டாடுகிறார்கள் .

இந்த நன்னாளில் சிறுபான்மை , பெரும்பான்மை என்ற பேதமெல்லாம் இல்லாமல் , அன்பும் அமைதியும் பெருகி எங்கும் மகிழ்ச்சி நிறைந்திட வாழ்த்துகிறேன் . உலக அரங்கில் தனித்துவமுடன் திகழும் இந்தியாவின் பன்முகத்தன்மை மேலும் சிறந்திட இந்த தேசத்தின் காவலர்களாக நம் எல்லோரின் கரங்களும் இணையட்டும் . நெஞ்சார்ந்த ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள் .”

Visits: 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *