விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக துணை வேந்தர்களுக்கென இரண்டுநாள் கருத்தரங்கு நடத்திட ஆளுநர் ஏற்பாடு செய்திருப்பது மாநில அரசின் ஆட்சி நிர்வாகத்தில் குழப்பத்தை உருவாக்கும் உள்நோக்கம் கொண்ட முயற்சியாகும். இதனை உடனடியாகத் தடுத்திட மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைந்து ஆவன செய்ய வேண்டுகிறேன். மேற்கு வங்கத்தில் 2020 இல் இது போன்ற முயற்சி நடந்த போது அம்மாநில முதல்வர் அவர்கள், ஆளுநரின் அழைப்பைப் புறக்கணிக்கும்படி துணைவேந்தர்களுக்கு ஆணை பிறப்பித்திருக்கிறார் என்கிற முன்மாதிரி உள்ளது என்பதையும் நமது முதல்வரின் பார்வைக்கு விசிக சார்பில் முன்வைக்கிறோம்.”
Visits: 7