Fri. Mar 29th, 2024

15 வது ஐபிஎல் சீசன் 33 வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை இந்தியன்ஸ்:
மும்பை அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப மிடில் ஆர்டரில் வந்த சூர்யா குமார் யாதவ் 32 (21) ரன்னும், திலக் வர்மா 51 (43) ரன்னும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டும், ப்ராவோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் உத்தப்பா 30 (25) ரன்னும் அவர்பின் வந்த ராயுடு தன் பங்குக்கு 40 ரன்னும் அடித்தனர். சென்னை கடைசி ஓவரின் கடைசி பந்தில் திரில் தோனியின் அதிரடியால் வெற்றி பெற்றது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணியில் சிறப்பாக பந்துவீசிய டேனியல் சம்ஸ் 4 விக்கெட்டும், உனட்கட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *