Thu. Mar 28th, 2024

மாண்புமிகு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் திருமிகு மன்சுக் மாண்டவியா அவர்களுக்கு கடிதம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் .

அந்த கடிதத்தில் “எதிர்வரும் மே 3 அன்று வரை 2021 நீட் முதுகலை அகில இந்திய ஒதுக்கீடு ( AIQ ) இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது . மே 23 இல் 2022 நீட் முதுகலை தேர்வுகள் நடைபெறவுள்ளன . இதில் இரண்டு பிரச்சினைகள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன . ஒன்று , கோவிட் காரணமாக பல்லாயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களின் பயிற்சிக் காலம் ( Internship ) பல மாநிலங்களில் தாமதம் ஆகியுள்ளது . ஆகவே அவர்கள் 2022 நீட் தேர்வில் பங்கு பெற இயலாத நிலை உள்ளது . ஓராண்டு வீணாகிற நிலைமை ஏற்பட்டுள்ளது . இரண்டாவது , நீட் முதுகலை அகில இந்திய ஒதுக்கீடு ( AIQ ) இடங்களுக்கான கலந்தாய்வு மற்றும் 2022 நீட் முதுகலை தேர்வுகள் இரண்டிற்குமான கால இடைவெளி மிகக் குறுகியதாக உள்ளது . மாநில அளவிலான கலந்தாய்வு தேதிகளும் அடுத்ததாக வரும் . கால இடைவெளி குறைவாக இருப்பது நடு மட்ட தர வரிசை மாணவர்களை முடிவெடுப்பதில் குழப்பத்தில் ஆழ்த்தும் . இரண்டாவது தேர்வுக்கான தயாரிப்பிற்கு கால அவகாசமும் போதாது . ஆகவே தேர்வுத் தகுதி பெறாத பயிற்சி மருத்துவர்கள் பிரச்சினைக்கும் , உரிய கால இடைவெளியின்றி தேர்வுகள் நடத்தப்படுகிற நிலையைத் தவிர்க்கவும் கோரியுள்ளேன் . நல்ல பதில் வருமென எதிர்பார்க்கிறேன் .”

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *