Fri. Mar 29th, 2024

போர்ச்சுக்கலை சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை இறந்ததால் வேதனையில் இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ – ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு ஏற்கனவே நன்கு குழந்தைகள் உள்ளன. அதில் இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் தெரிவித்துள்ளார். இரட்டை குழந்தையில் ஒரு பெண்குழந்தை நலமாக பிறந்துள்ளது என்றும் அந்த குழந்தைதான் எங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தனிமை தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *