Thu. Apr 18th, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளதை பற்றி இணையதளத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பாஜக
இளைஞரணி செயலாளர் அருள் பிரசாத் என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அணிந்தருந்த ஜாக்கெட் உடை 17 கோடி என்று நிதியமைச்சர் தெரிவித்ததாக தமிழ் நியூஸ் நிறுவனத்தின் கார்டை எடிட் செய்து பொய் கருத்தை இணையதளத்தில் பரப்பி இருந்தார்.

அந்த பொய் செய்தியை நிதியமைச்சர் சுட்டிக்காட்டி “TN காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம். வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. சங்கிகள் வாட்ஸ்அப் விஷத்தைத் தாண்டிச் செல்லக் கூடாது” என்று கருத்து தெரிவித்து காவல்துறையிடம் புகாரளித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக காவல்துறை பாஜக இளைஞரணி செயலாளர் அருள் பிரசாத்தை இன்று கைது செய்தது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *