Thu. Apr 25th, 2024

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டூ பிளெஸ்ஸி 88(57) அணிக்கு நல்ல அதிரடி தொடக்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் களமிறங்கிய கோஹ்லி 41(29), தினேஷ் கார்த்திக் 32(14) ரன்கள் அடித்தனர். 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் சிறப்பாக விளையாடி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் தவான் 43(29) ரன்களும் , ராஜபக்ச 43(22) ரன்களும் எடுத்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *