Fri. Mar 29th, 2024

15வது ஐபிஎல் டி20 முதல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 131 ரன்களை சென்னை அணி எடுத்து இருந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக தோனி 50 ரன்கள் எடுத்தார். பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதது. உமேஷ்யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கியுள்ளது.

Visits: 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *