உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் இன்று மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 35 ரன்களில் அவுட் ஆகினர். இதன் பின்னர் தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட் ஆக ரிச்சா கோஷ் மட்டும் 33 ரன்கள் அடித்தார். 36.2 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் சார்லோட் டீன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஹீதர் நைட் 53 ரன்களும் , நடாலி ஸ்கிவர் 45 ரன்களும் எடுத்து வெற்றியை எளிதாக்கினர். 31.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய மேக்னா சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Visits: 8