இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி இன்று தனது டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் நிசாங்கா 75(53), குணதிலகா 38(29), சனாகா 47(19) தவிர வந்த மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 183 ரன்களை மட்டும் எடுக்க முடிந்தது.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித்தும் இஷான் கிசானும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். ஷ்ரேயாஸ் ஐயர் 74(44) ரன்களிலும், சஞ்சு சாம்சன் 39(25) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா தன் பங்குக்கு அதிரடியாக விளையாடி 45(18) ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற உதவினார். 17.1 ஓவரில் இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகள் பறிகொடுத்து 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது T20 போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.
Visits: 10