Thu. Mar 28th, 2024

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை

“வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 21 பேர் இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 21 நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் விடுதலையாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

விடுதலை செய்யப்பட்ட 21 மீனவர்கள் தவிர, நேற்று முன்நாள் கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் உட்பட மொத்தம் 29 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்!

கடந்த பல ஆண்டுகளில் தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *