இன்று இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே இரண்டாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி அணி வீரர்கள் ரோஹித் சர்மா 5, ரிஷப் பண்ட் 18 மற்றும் கோஹ்லி 18 சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இதன் பின்னர் வந்த ராகுல் 49 மற்றும் சூர்யகுமார் யாதவ் 64 இணைந்து சிறப்பாக விளையாடினர். முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்ஜாரி ஜோசப் 2, ஓடியன் ஸ்மித் 2 விக்கெட் வீழ்த்தினர்.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் சாய் ஹோப் 27 ரன், பிராண்டன் கிங் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். இதன் பின்னர் தொடர்ந்து வந்த சமர் ப்ரூக்ஸ் 44, அகேல் ஹொசைன் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா 4, ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இதனால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
Visits: 4