Fri. Mar 29th, 2024

CPIM சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை

“12000 ஆண்டு கால இந்திய பண்பாடு தோற்றம் மற்றும் பரிணாமம் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு பற்றி நான் நாடாளுமன்றத்தில் 20.09.2020 பூச்சிய நேரத்தில் எழுப்பி இருந்தேன் . 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் ஒன்றிய அரசின் குடியரசு தலைவருக்கு தரப்பட்டது . 16 பேர் கொண்ட அக்குழுவில் தென் இந்தியர் , வடகிழக்கு இந்தியர் , சிறுபான்மையினர் , தலித் , பெண் , தமிழ் உள்ளிட்ட தென் இந்திய மொழி ஆய்வாளர் எவருமில்லை . விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா ? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா ? சமஸ்கிருதம் தவிர வேறு மொழி இல்லையா ? என்ற கேள்விகளை நான் எழுப்பி இருந்தேன் . அந்த குழுவைக் கலைக்க வேண்டுமென குடியரசுத் தலைவருக்கான கூட்டுக் கடிதத்தில் கோரி இருந்தோம் .

அதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி ( கடித எண் D.O No.T -17025/11/2018 – EE ( Part 1 ) 17.01.2022 ) இந்தக் குழுவின் பணி ஏற்கெனவே உள்ள மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி ஆணையத்தின் ( CABA ) வரையறுக்கப்பட்ட பணி வரம்பிற்கு உட்பட்டதாக இருப்பதால் அதுவே இக் குழுவின் பணியையும் சேர்த்து செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் , மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி ஆணையத்தின் உள்ளடக்கம் மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும் , அதில் பன்மைத்துவம் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .

தமிழ்நாட்டின் குரலுக்கு கிடைத்த வெற்றி . 31 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி . இந்தியாவின் பன்மைத்துவத்தின் காவலராக என்றும் தமிழ்நாடு திகழும் , முன் நிற்கும் என்பதற்கான இன்னொரு நிரூபணம் இது .

சி.ஏ.பி.ஏ உள்ளடக்கம் அரசின் உறுதி மொழிப் படி அமையுமென்று நம்புவோம் . கவனத்தோடு உறுதி செய்வோம் .”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *