Thu. Mar 28th, 2024

புதுடெல்லி: மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் வில்சன் வழக்கு தொடுத்திருந்தார்.

மருத்துவப் முதுகலை மேற்படிப்புக்கு நடத்தப்படும் கவுன்சலிங் இடஒதுக்கீடு வழக்குகளால் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது ” மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு இந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் அதேபோல் உயர்சாதி ஏழைகளுக்கான 10% EWS இடஒதுக்கீடு இந்த ஆண்டு மட்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார்.
மேலும் EWS இடஒதுக்கீடு பற்றி மார்ச் 3-வது வாரம் அன்று விரிவான தீர்ப்பு தரப்படும்” என்றும் கூறினார்.

உயர்சாதி ஏழையினருக்கான இடஒதுக்கீடு பெறுவதற்கான தகுதிகள் குறித்து மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும்.

பத்திரிக்கையாளர் மு.குணசேகரன்:

“மருத்துவ முதுநிலை படிப்புகளில், அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களுக்கான (AIQ) மாணவர் சேர்க்கையில், முதல் முறையாக பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான (OBC) இட ஒதுக்கீடு இந்தாண்டு நடைமுறைக்கு வருகிறது.

சமூகநீதி தளத்தில் தமிழ்நாடு சாதித்த மிகப்பெரிய வெற்றி இது! பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்கள் இதனை சாத்தியமாக்கி இருக்கிறது. பல முட்டுக்கட்டைகள், இழுத்தடிப்புகளை கடந்து பெற்ற வெற்றி. ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாரராக வாதாடியது திமுக. நேற்று பி்.வில்சன் முன்வைத்த வாதம் முக்கியமானது.”

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *