மதுரை: மதுரை மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் இருகோஷ்டிகளுக்கிடையே நடந்த மோதலால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மத்திய சிறையில் 1300க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திருமங்கலத்தைச் சேர்ந்த போன சட்டசபை அமமுக வேட்பாளரும் மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் விசாரணை பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆதிநாராயணன் உட்பட சில கைதிகளுக்கும், சில தினங்களுக்கு முன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட திருச்சியை சேர்ந்த ஜெகன் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. உணவு இடைவேளையின்போது இருதரப்புக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
ஆதிநாராயணன் அவர்கள் தன்மீது சிறைக்குள் எதிர்தரப்பு தாக்குதல் நடத்த திட்டமிடப்படுவதாக சிறை கண்காளிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறைக்கண்காளிப்பாளர் விசாரணை நடத்த ஜெகனை அவரது அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அதனை அறிந்த ஜெகன் தரப்பு கைதிகள் சிறை கட்டிட சுவரில் ஏறி சிறைநிர்வாகம், ஆதிநாராயணனுக்கு எதிராக கோஷமிட்டும் ஓடு, பாட்டில், செங்கற்களை எடுத்து சாலையில் சென்றவர்கள் மீது வீசி எறிந்தனர்.
பின்பு சிறைநிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறங்க செய்து சிறையில் அடைத்தனர்.
Visits: 4