Fri. Mar 29th, 2024

தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை

“அன்னை தெரசாவின் சகாப்தத்திற்கு மோடி வழங்கியுள்ள பரிசு , கிறிஸ்துமஸ் நாளில் அவரின் அறக்கட்டளைக்கான நிதியை முடக்கியிருப்பதுதான் .

சட்டத்தை ஒருவர் மீறினால் அதற்கேற்ற நடவடிக்கைதான் எடுக்க வேண்டும் . ஆனால் மோடி அரசாங்கமோ வி.எச்.பி அமைப்பும் , தர்ம சன்சாத் அமைப்பும் விரும்பியதை செய்து கொடுத்துள்ளது .

சிறுபான்மை மக்களை ஆயுதம் ஏந்தி தாக்குவதற்கு அழைப்பு விடுத்து உறுதிமொழி எடுத்தவர்களை சிலர் ‘ உதிரிகள் ‘ என்று குறிப்பிடுகிறார்கள் . அவர்கள் உதிரிகள் இல்லை , இப்போது அவர்கள்தான் தலைமையில் உள்ளார்கள் .

கோட்சே அப்படித்தான் ‘ உதிரி ‘ என்று குறிப்பிடப்பட்டார் . ஆனால் இன்று காந்திக்கு மாற்றான நாயகராக கோட்சேவை நாயகனாக முன்நிறுத்தும் போக்குகள் எழுகின்றன . இப்போது கோட்சே உதிரியாக இல்லை , மைய இடத்திற்கு இழுத்துவரப்படுகிறார் . அரசாங்கம் சட்டப்படி நடக்க வேண்டும் .”

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *