வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினராக உள்ள ஒருவர் சட்டவிரோத கருத்தை பரப்பியதால் அட்மின் மீதும் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி “வாட்ஸ் அப் பதிவுகளை முறைப்படுத்தவோ, தணிக்கை செய்யவோ அட்மினால் முடியாது; உறுப்பினர்களின் பதிவு சட்டத்திற்கு உட்பட்டவையே; அவர்களது பதிவிற்கு அட்மின் பொறுப்பாக முடியாது என ஒரு வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே மனுதாரர் அந்த குழுவின் அட்மின் மட்டுமே என்பது உறுதியானால், வழக்கின் இறுதி அறிக்கையில் அவரது பெயரை நீக்க வேண்டும்; போதுமான ஆவணங்கள் கிடைத்தால் மட்டுமே மனுதாரரை வழக்கில் சேர்க்க வேண்டும்.”
Visits: 1