Thu. Mar 28th, 2024

கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் இன்று  வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்

“தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து , விலை உயர்ந்து வருவதால் , அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி , தினசரி தேவைக்கான காய்கறிகள் வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக டியுசிஎஸ் , சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் உட்பட 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் சென்னை , கோயம்புத்தூர் , தூத்துக்குடி , மதுரை , திருவண்ணாமலை , திருச்சிராப்பள்ளி , தஞ்சாவூர் , திருநெல்வேலி , திருப்பூர் , சேலம் , ஈரோடு , வேலூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து காய்கறிகளும் ( குறிப்பாக தக்காளி ) விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

இவற்றின் மூலம் குறிப்பாக வெளிச்சந்தையில் தற்போது ரூ . 110 முதல் ரூ 130 வரை விற்கப்பட்டு வரும் தக்காளி , கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ .85 முதல் ரூ .100 வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 MT தக்காளி கொள்முதல் செய்யவும் , இதனை படிப்படியாக உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

இவ்வாண்டு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ . 17.70 கோடி . மதிப்பிலான 5290 மெட்ரிக்டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன . “

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *