Fri. Apr 19th, 2024
  • 2021-2022 – ம் கல்வியாண்டில் , அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் , 2022 ஜனவரி மாதம் 23 – ஆம் தேதி ( ஞாயிற்றுக் கிழமை ) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTSE) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது .
  • விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / – சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.11.2021 மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது .

அறிவுரைகள் :

  • தேர்வர்கள் ( NTSE ) தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்னாப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முககவசம் ( Mask ) , அணிந்து வரவேண்டும் .
  • போதிய சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் .

முக்கிய குறிப்பு :

  • தேர்வர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போதே தங்களது வகுப்புச் சான்றிதழை ( Community Certificate ) ( SC / ST / OBC ( Non – Creamy Layer ) EWS ( Economically Weaker Section ) தவறாது சமர்ப்பிக்க வேண்டும் . தலைமை ஆசிரியரால் விண்ணப்பங்கள் Online- ல் பதிவேற்றம் செய்யப்படும் போது பதிவேற்றம் செய்யப்படாத வகுப்புச் சான்றிதழ்கள் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பபாட்டாது . மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம் .

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *